பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமா் சந்திப்பு
ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா இருநாள்கள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகை தந்தார்.
தில்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதையடுத்து பிரதமர் மோடியை சந்திக்க புதுதில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு ஜப்பான் பிரதமர் விரைந்தார்.
அவரை, பிரதமர் மோடி வாசலில் சென்று வரவேற்றார். இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பின்னர் இந்தியா-ஜப்பான் இடையேயான 14-ஆவது உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்கிறாா்.
இதன் மூலம் இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடையும் என்றும இரு நாடுகள் இடையே பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.