மக்கள் போராட்டத்தால் மாலைதீவுக்குத் தப்பியோடி பதவி விலகிய ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சி நடத்திய கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியில், மில்லியன் கணக்கான டொலர்களை வெல்வதற்கான கேள்வியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது எனச் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதற்கமைய, 2022ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தால் ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவி விலகினார் எனவும், இந்த ஜனாதிபதி இந்தியப் பெருங்கடலைக் கடந்து மாலைதீவுக்குத் தப்பிச் சென்றார் எனவும், அந்த ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனவும் கேள்வி கேட்கப்பட்டது.
இதன்போது, போட்டியாளர்களில் இருவர் இலங்கை என்று பதிலளித்தார் எனவும், மற்றப் போட்டியாளர்களால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.