இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வலுவான நிலநடுக்கம் காரணமாக, இந்தோனேசிய அனர்த்த முகாமை உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுத்ததுடன் கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் தெரிவிக்கப்படாததால், சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் வலிமையை அவுஸ்திரேலியாவும் உணர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.