ஆப்கானில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை நீக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசுகையில்,

கல்வி பயில கொடுமைப்படுத்தும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது. குறிப்பாக, ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி நாளின் கருப்பொருள், கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள் என்பதே ஆகும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.