13 ஆவது திருத்தம் முழுமை பெற ஒருபோதும் இடமளியோம்! – விமல் சபதம்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“13 ஐ முழுமையாக அமுலாக்க இடமளிக்கமாட்டோம். அதனை தோற்கடிக்க எல்லா வழிகளிலும் போராடுவோம்” என்றும் விமல் குறிப்பிட்டார்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தையும் விமல் வரவேற்றார்.