உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா? – 8 ஆம் திகதி இறுதி முடிவு.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற முடிவை அரசு நாளைமறுதினம் (8 ஆம் திகதி) அறிவிக்கவுள்ளது என்று அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் விசேட அறிவிப்பு ஒன்றை நிதி அமைச்சு நாடாளுமன்றில் விடுக்கவுள்ளது.
அதாவது, தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதையை பொருளாதார நிலைமையின் கீழ் தேர்தலுக்கு வழங்குவதற்குப் பணம் இல்லை என்றே அந்த அறிவிப்பு அமையப்போகின்றது என்று உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனை அடிப்படையாக வைத்து தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற அறிவிப்பை அரசு நாளைமறுதினம் விடுக்கவுள்ளது.