பொலிஸார் மீது கைக்குண்டை வீச முயன்றவர் சுட்டுப் படுகொலை!

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க – மடவல பகுதியில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தமையினாலேயே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.