கப்பலின் தீ அணைக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது

இலங்கைக்கு வெளியே கிழக்குக் கடலில் பயணம் செய்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க இலங்கையும் இந்தியாவும் பாரிய நடவடிக்கையைத் தொடங்கின. இந்த கப்பல் மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்று கொண்டிருந்தது .
கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க முடிந்தது என்று இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடலோர காவல்படை தனது ஆறு கப்பல்களையும் இரண்டு உளவு விமானங்களையும் அனுப்பியிருந்தது, அதே நேரத்தில் இலங்கை கடற்படை இரண்டு கப்பல்கள், ஒரு டோரா மற்றும் மூன்று டக்போட்கள், அத்துடன் இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் இரண்டு உளவு விமானங்களை அனுப்பியது.