தாண்டிக்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தாண்டிக்குளம் – ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த பாலசிங்கம் சுரேஷ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்றிரவு உணவருந்திவிட்டு நித்திரைக்குச் சென்ற குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.
பின்னர் அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.