சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டிலை தட்டிச்சென்றார் அருணா.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சூப்பர் சிங்கர் 9 சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், சீசன் 9 வின்னர் டைட்டிலை அருணா தட்டிச் சென்றார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது.

பிரியா ஜெர்சன் இரண்டாவது இடமும், பிரசன்னா 3-வது இடம் பிடித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.