கார் மோதி 5 வயது சிறுவன் பரிதாபச் சாவு! – தந்தை படுகாயம்.

வாகன விபத்தில் 5 வயது சிறுவன் சாவடைந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.

வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 36 வயதுடைய குடும்பஸ்தரும், அவருடன் பயணித்த 5 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், சிறுவன் உயிரிழந்தார்.

காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.