ஸ்மார்ட்போன் வாங்கினால் தக்காளி இலவசம்!

ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு தக்காளி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள செல்போன் கடை இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகின்றது. ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ரூ.250-க்கு விற்பனையாகிறது.

தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், அசோக் நகர் பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில், ஸ்மார்ட்போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசம் என கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் அபிஷேக் கூறுகையில், தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில், தக்காளியை இலவசமாக வழங்கினால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.