உலகப் பொருளாதார மன்றம் ஜீவன் தொண்டமானை உலகளாவிய தலைவராக நியமித்துள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தினால் இளம் உலகளாவிய தலைவராக (YGL) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் , தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் அமைச்சர் ஒருவர் இளம் உலகத் தலைவராக (YGL) அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் தடவை என்பதால், அமைச்சர் ஜீவன் தொண்டமான் இளம் உலகளாவிய தலைவராக (YGL) தெரிவு செய்யப்பட்டமை ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.
கடந்த ஆண்டு அமைச்சராகப் பதவியேற்ற ஜீவன் தொண்டமான், வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், சமூக நீதிக்காக வாதிடுவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் நீர் வழங்கல் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்கான அவரது புதுமையான அணுகுமுறை தேசிய அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் மேற்கண்ட தேர்வு மூலம், அது இப்போது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யங் குளோபல் லீடர்ஸ் (ஒய்ஜிஎல்) சமூகம் என்பது, உலகளவில் எதிர்காலத்தை வடிவமைக்க உறுதிபூண்டுள்ள 1,000 விதிவிலக்கான தலைவர்களைக் கொண்ட இணையற்ற, பல பங்குதாரர்களின் சமூகமாகும். இளம் உலகளாவிய தலைவராக (YGL) தெரிவு செய்யப்பட்டமை, அமைச்சர் தொண்டமானின் தொலைநோக்கு பார்வைக்கும், தலைமைத்துவப் பண்புகளுக்கும், சமத்துவம் மற்றும் நிலைத்தன்மைக்கான அவரது அடங்காத துணிச்சலுக்கும் சிறந்த சான்றாகும்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தொண்டமானின் இந்தச் சாதனைக்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேசத்தின் அபிவிருத்தி இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், இளைஞர்களின் வலுவூட்டலை ஊக்குவிப்பதற்கும், உலக அரங்கில் இலங்கையின் பிரசன்னத்தை மேம்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
அமைச்சர் தொண்டமான் ஒரு இளம் உலக தலைவராக (YGL) தெரிவு செய்யப்பட்டமை அரசியல் ரீதியாக உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் முற்போக்கான சக்தியாக அவரது பங்கை வெளிப்படுத்துகிறது. பயனுள்ள தலைமைத்துவத்திற்கான சாத்தியக்கூறுகளையும், மேலும் உள்ளடக்கிய, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.