SJB-NPP விவாதம் எப்போது என்பதை தீர்மானிக்க நடந்த இன்னோரு விவாதம்.

SJB மற்றும் NPP பொருளாதாரக் குழுக்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான விவாதம் எப்போது நடத்தப்படும் என்பதை தீர்மானிக்கும் விவாதம் ஒன்று சிரச சேனலில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட SJB பிரதிநிதி நளின் பண்டார, இது தொடர்பான இரு விவாதங்களுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும், அதற்கான திகதிகள் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள் முதலில் விவாதம் செய்ய வேண்டும் எனவும் , அதன் பின் பொருளாதாரக் குழுக்கள் அல்லது வேறு குழுக்களிடையே விவாதம் நடத்துவது பொருத்தமாக இருக்கும் எனவும் NPP சார்பில் கலந்துகொண்ட நளின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச மே 20ஆம் திகதிக்கு முன்னர் திகதியை வழங்காவிடின் அவர் கலந்துகொள்வதில்லை என கருதி , பொருளாதாரக் குழு விவாதத்துக்கான ஒரு திகதியை வழங்குவதாகவும் நளின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.