13 குறித்து சஜித் பிரேமதாச , மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது – கோவிந்தன் கருணாகரம்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால் , அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (03) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மே மாதம் 06 ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்வினை வருடாந்தம் தமிழீழ விடுதலை இயக்கம் அனுஸ்டித்து வருகின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம்,சஜித் பிரேமதாச கூறியதாக மனோ கணேசன் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என தெரிவித்துள்ளார். அதனை இவர் கூறக்கூடாது , தமிழ் தேசியத்திற்காக தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் ஆக குறைந்தது அதன் மூன்றாவது திருத்தச் சட்டத்தையாவது அந்த திருத்தச் சட்டத்தில் உள்ளதை உள்ளபடி முழுவதுமாக நான் அமுல்படுத்துவேன் என்பதனை எங்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கும் கூறவேண்டும்.

எங்களுக்கு ஒரு கதை , வட கிழக்கிற்கு ஒரு கதை , தெற்கிற்கு ஒரு கதை கூறாமல் பகிரங்கமாக அறிவித்து அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.