முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்! (Video)

கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றது.

வீதியில் பயணித்த பொதுமக்களுக்கு மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதன்போதே, வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் பெற்றுப் பருகியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு – கிழக்கில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.