இலங்கை, இந்திய மீனவர்கள் 17 பேர் சிறப்பிடிப்பு!

இலங்கை, இந்திய மீனவர்கள் 17 பேர் 6 படகுகளுடன் இலங்கை, இந்தியக் கடற்படையினரால் நேற்று (16) சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 14 இலங்கை மீனவர்களை (வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள்) இந்தியாவின் காரைக்கால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காரைக்காலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதேநேரம் தமிழகம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிப்பட்டின மீனவர்கள் மூவர் பயணித்த படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மாதகல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கிய படகில் பயணித்த மூன்று தமிழக மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.