கோவாக்சின் போட்டவர்களுக்கும் இந்த நிலை தான் – பகீர் ஆய்வு முடிவுகள்!

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட கோவிஷீல்டை, ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும், கோவாக்சினை ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரித்தது.

இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு அரியவகையான ரத்த உறைதல் பாதிப்பு, தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவு ஆகிய பக்கவிளைவுகள் இருப்பதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக் கொண்டது.

தொடர்ந்து, சந்தையிலிருந்து கோவிஷீல்டு தடுப்பூசி திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் பனாரஸ் இந்து பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

இளம் பருவத்தினர் 635 பேர் மற்றும் வயதுவந்தோர் 291 பேரிடம், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஓராண்டுக்குப் பின் நிலவரம் குறித்து தொலைபேசி மூலம் கருத்துக்கேட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில், 33 சதவீதம் பேர், தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், 10.5 சதவீதம் பேருக்கு தோல் பாதிப்பும், 10.2 சதவீதம் பேருக்கு பொதுவான பாதிப்புகளும், 4.7 சதவீதம் பேருக்கு நரம்பியல் பாதிப்புகளும் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக, சுவாசக் குழாயின் மேல் பகுதியில் வைரஸ் தொற்று, பக்கவாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, பெண்களில் 4.6 சதவீதம் பேருக்கு மாதவிடாய் பிரச்சினை,

2.7 சதவீதம் பேருக்கு கண் பாதிப்பு, 6 சதவீதம் பேருக்கு தைராய்டு பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்டவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் இருந்துள்ளது. 50 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்! (Video)

10 ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் நாளை இந்தோனேசியா பயணம்!

அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்! – ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை.

நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து தமிழர்களை மேலும் புண்படுத்தாதீர்! – அரசிடம் மைத்திரி வேண்டுகோள்.

O/L பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

பிள்ளைகள் வெளிநாட்டில்! மன விரக்தியடைந்த தந்தை உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்.

இலங்கை, இந்திய மீனவர்கள் 17 பேர் சிறப்பிடிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அமைதியான பிரார்த்தனைக்கு ஆறு. திருமுருகன் வேண்டுதல்!

விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு அனுப்பப்படும்! – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.

ரஷ்யாவிற்கு கூலிபடையினராக படையினரை அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் -முகாமையாளர் கைது.

கட்டுநாயக்க ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தேன் – பிரசன்ன ரணவீர.

மினுவாங்கொடையில் உள்ள ஒரேயொரு தமிழ் மொழி கல்லூரி மாணவர்களுக்கு புவியியல் 1ம் தாள் வழங்கப்படவில்லை.

இராணுவத்தை பாதிக்கு மேல் குறைக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு சபையும் தயார்!

ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம் – கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

Leave A Reply

Your email address will not be published.