காணாமல் போன சிறுவன்; கழிவுநீர் ஓடையில் கிடந்த சடலம் – பள்ளிக்கு தீ வைத்த உறவினர்கள்!

மாயமான மாணவனின் சடலம் பள்ளி வளாகத்தில் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் டைனி டாட் அகாடமி என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . இங்கு அதே பகுதியை சேர்ந்த ஆயுஷ் (7) என்ற மாணவன் படித்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்கு சென்று இருந்த மாணவர், மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவனை தீவிரமாக தேடி உள்ளனர்.

அவர்களுடன் மாணவனின் உறவினர்களும் சேர்ந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காததால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று பள்ளியில் தேடியபோது அங்கு உள்ள கழிவுநீர் ஓடை ஒன்றில் சிறுவன் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், சிறுவன் பலியான செய்தியை கேட்டு ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு குவிந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாகவே இது நடந்ததாக கூறி அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது சிலர் வளாகத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து கொளுத்தினர்.

மேலும் பள்ளிக்கு செல்லும் சாலையில் டயர்கள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். அதேபோல போராட்டத்தை கட்டுப்படுத்தவும் போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். மாணவன் உயிரிழந்தது எப்படி என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலதிக செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்! (Video)

10 ஆவது உலக நீர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் நாளை இந்தோனேசியா பயணம்!

அமைச்சரவையில் இருந்து விஜயதாஸவை நீக்குங்கள்! – ஜனாதிபதியிடம் மீண்டும் கோரிக்கை.

நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து தமிழர்களை மேலும் புண்படுத்தாதீர்! – அரசிடம் மைத்திரி வேண்டுகோள்.

O/L பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

பிள்ளைகள் வெளிநாட்டில்! மன விரக்தியடைந்த தந்தை உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்.

இலங்கை, இந்திய மீனவர்கள் 17 பேர் சிறப்பிடிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அமைதியான பிரார்த்தனைக்கு ஆறு. திருமுருகன் வேண்டுதல்!

விசேட தூதுக்குழு ரஷ்யாவிற்கு அனுப்பப்படும்! – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.

ரஷ்யாவிற்கு கூலிபடையினராக படையினரை அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் -முகாமையாளர் கைது.

கட்டுநாயக்க ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தேன் – பிரசன்ன ரணவீர.

மினுவாங்கொடையில் உள்ள ஒரேயொரு தமிழ் மொழி கல்லூரி மாணவர்களுக்கு புவியியல் 1ம் தாள் வழங்கப்படவில்லை.

இராணுவத்தை பாதிக்கு மேல் குறைக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு சபையும் தயார்!

ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம் – கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மீது வழக்குப் பதிவு

கோவாக்சின் போட்டவர்களுக்கும் இந்த நிலை தான் – பகீர் ஆய்வு முடிவுகள்!

மும்பை ராட்சத பேனர் விபத்து – விளம்பர நிறுவன உரிமையாளர் கைது

Leave A Reply

Your email address will not be published.