தேசிய போர்வீரர்கள் நினைவு தினம் , இன்று ஜனாதிபதி தலைமையில் …..

முப்பது வருடகால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய மாவீரர்களை நினைவுகூரும் 14வது தேசிய போர்வீரர் நினைவு தினம் இன்று (19) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பத்தரமுல்ல போர்வீரர் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம் மற்றும் போர்வீரர் சேவை ஆணையம் இணைந்து , இலங்கையில் நடைபெற்ற போரில் தாயகத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்த ஆயுதப்படை, காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 28619 போர்வீரர்களின் துணிச்சலைப் பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்தன.

இந்த வருடத்திற்கான தேசிய போர்வீரர் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பிரமாண்டமான முறையில் அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தியாகிகளின் உறவினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.