தலைமறைவான டயனா நீதிமன்றில் ஆஜர்.

இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் ஆஜராகியபோதே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின்போது டயனா கமகேவைக் காணவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.

இதனையடுத்தே அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.