ஞானசார தேரருக்கு வெசாக் தினத்தில் ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்குமா?

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் நாளை வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள கைதிகளில் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெசாக் தினத்தில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு நான்கு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரர் நான்கு வருடங்கள் கடின உழைப்பை அனுபவித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.