யாழில் பனை மரம் முறிந்து வீழ்ந்து வீடொன்று சேதம்.

அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அந்த வீடு சேதமடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடே நேற்று இவ்வாறு சேதமாகியுள்ளது.

அதேவேளை, நேற்று வீசிய கடும் காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிக்கையிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.