சட்டமா அதிபரின் , பதவிக் காலத்தை டிசம்பர் வரை நீடிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை இவ்வருடம் டிசம்பர் இறுதிவரை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு தேவையான கோரிக்கையை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

சட்டமா அதிபரின் பதவிக்காலம் ஜூன் 27ம் தேதியுடன் முடிவடைகிறது.

பிரதம நீதியரசர் ஜயந்த வீரசூரிய இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார்.

அதற்கு முன்னர் சட்டமா அதிபர் ஓய்வு பெற்றால், அவரை பிரதம நீதியரசராக்க ஜனாதிபதியால் முடியாது.

எனவே, சட்டமா அதிபரின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டதுடன், பிரதம நீதியரசர் ஓய்வுபெறும் வரை சட்டமா அதிபராக நீடிக்க வைத்து , அவரை பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் சட்டமா அதிபராக அறியப்படுகிறார். தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சட்டமா அதிபராக கடமையாற்றிய போதே பிரதம நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய சட்டமா அதிபராக கடமையாற்றிய போது, ​​முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்டு அரசாங்கத்தை நிறுவியதோடு,அரசியலமைப்பு அதற்கு எதிரானது அல்ல என்பது சட்டமா அதிபராக அன்று இருந்த ஜயந்த ஜயசூரியவின் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என ஏழு பேர் கொண்ட அமர்வு தீர்மானித்தது.

ஜுன் மாதம் அரசியலமைப்பு பேரவை கூடும் திகதி தொடர்பில் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான யோசனை சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது

Leave A Reply

Your email address will not be published.