பொய்யான வாக்குமூலத்தை வழங்கிய கலாநிதி புன்சர அமரசிங்க கைது!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கை சந்தேகநபர்கள் தொடர்பில் பொய்யான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.