யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதாரத்துறை, விவசாயம், காணி விடுவிப்பு, நீர்வளம், சமூக பாதுகாப்பு நலன்புரி விடயங்கள், வீட்டுத்திட்டம், மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதி பெறும் செயற்றிட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன், யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.