ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நிச்சயம் நடத்தப்படும்! – ரணில் திட்டவட்டம்.

ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நிச்சயமாக நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இளம் சட்டத்தரணிகளுடன் நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.