காணாமல்போன மீனவர்களின் வீடுகளுக்குச் சென்ற சிறீதரன் – குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

திருகோணமலை, சல்லி பகுதியில் இருந்து அண்மையில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களின் வீடுகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று விஜயம் செய்தார்.

இந்த மாதம் 20 ஆம் திகதி சல்லி பகுதியில் இருந்து காலை 10 மணியளவில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர். சல்லி, 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 45), முருகையா சுஜந்தன் (வயது 22) என்பவர்களே காணாமல்போயுள்ளனர். தேடுதல் நடவடிக்கை தொடர்கின்ற போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் அறிந்த சிறீதரன் எம்.பி., காணாமல்போன மீனவர்களின் வீடுகளுக்கு இன்று சென்று அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் சிறீதரன் எம்.பி. இதன்போது தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.