நானா அல்லது துமிந்தவா… SJB மற்றும் சஜித் முடிவு சொல்ல வேண்டும் : ஹிருணிகா.

துமிந்த சில்வாவை மன்னிக்கும் ஒப்பந்தத்தில் SJB ஈடுபட்டிருந்தால் SJBக்கு வேண்டியது நானா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று (02) தெரிவித்துள்ளார்.

“SJBயின் தலைவர் , துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு உடன்படமாட்டார் என நான் நம்புகிறேன். இருப்பினும், அவரைச் சுற்றியுள்ள மற்றவர்கள் அவரை சம்பந்தப்பட்ட நபர்களுடன் சமாளிக்க தூண்டலாம். இந்த நேரத்தில் நான் முக்கியமா அல்லது வேறொருவுரா என்பதை கட்சி தீர்மானிக்க வேண்டும்” என ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவுக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் மன்னிப்பு வழங்கியதையும் தன்னால் அதனை மாற்றியமைக்க முடிந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Leave A Reply

Your email address will not be published.