UNP தேர்தலுக்கு தயாராகிறது: ரவி-ஹரின் மற்றும் ஃபிரோஸுக்கு புதிய பதவிகள்

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய செயற்குழு நேற்று (ஜூன் 2) நியமிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அங்கு தேசிய தேர்தல் அமைப்பாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியேற்றார். ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகிகள் குழுவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு மொஹமட் பிர்தௌஸ் பாரூக் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராகவும், பொருளாளராக இருந்த மிஸ்பா சத்தார் உப தலைவராகவும் , கிரிஷான் தியோடர் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தலைவர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட அதிகாரிகளின் பதவிகளை தொடர்ந்தும் தக்கவைக்க செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.