கோமா நிலைக்கு போன மகனை நினைத்து , தந்தை தற்கொலை செய்து கொண்ட தருணத்தில் சுயநினைவடைந்த மகன்

3 மாதங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு திவுலப்பிட்டி வீதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

மூன்று மாதங்களாக சுயநினைவின்றி இருக்கும் மகனைப் பற்றி அவரது தந்தை மிகவும் கவலைப்பட்டதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் மூன்று நாட்களுக்கு முன்னர் வாகன விபத்தில் சிக்கிய இளைஞருக்கு ஆபத்தான விசேட சத்திரசிகிச்சை ஒன்றை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான சத்திரசிகிச்சை நடக்கும் போது, ​​திவுலப்பிட்டிய தூனகஹ பள்ளியாபிட்டிய பகுதியில் உள்ள தனது வீட்டில் இளைஞனின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

48 வயதுடைய தந்தையின் மரணத்தின் பின்னர், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மகன் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.