பட்டதாரி மாணவர்களுக்கு கடன்.. படித்து முடித்த பின் திருப்பிச் செலுத்த வேண்டும் .

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கடன் தொகையை வழங்குவதற்கு இலங்கை வங்கி ஏற்பாடுகளை செய்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மூன்று முறைக்கு மிகையாகாமல் சித்தியடைந்த மாணவர்கள் மட்டுமே இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கடன் வட்டியில்லாததுடன், பட்டப்படிப்புக்குப் பின் ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்த வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.