ஜனாதிபதியாக நினைத்த விஜயதாச மொட்டுவில் இருந்து வெளியே!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

விஜயதாச ராஜபக்ஷ வேறு ஒரு கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்ஷ வேறு ஒரு கட்சியின் தலைவர் பதவியை ஏற்பது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.