நாளையும், நாளை மறுநாளும் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

இந்திய பிரதமராக 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதை தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் டெல்லி பொலிஸ் 144 தடை உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் நாளை நரேந்திர மோடி 3 ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ளார்.

உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக நாளையும், நாளை மறுநாளும் டெல்லி பொலிஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே ஆளில்லா விமானங்கள், டிரோன்கள், உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.