தேசிய மக்கள் சக்தியின் இங்கிலாந்து நிறுவனம்.

தேசிய மக்கள் சக்தி இங்கிலாந்தின் லண்டனில் ‘NPP Member Group (UK) Limited’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் தொழில் ரீதியாக ஒரு டாக்டரான டபிள்யூ.ஜி. இந்துனில் தீப்தி குமார், நிர்வாகத் துறையில் பணியாற்றும் டபிள்யூ. ரஞ்சித் குமார், தொழிலில் எழுத்தரான எச்.வி. சனத் குமார ஜயரத்ன மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இங்கிலாந்தில் வசிப்பவர்கள்.

இங்கிலாந்தின் நிலையான தொழில்துறை வகைப்படுத்தலின் (SIC) படி, இந்த நிறுவனம் 94920 மற்றும் 94990 வகைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் 94920 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேறு எங்கும் வகைப்படுத்தப்படாத பிற உறுப்பினர் அமைப்புகளின் செயல்பாடுகள் 94990 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி லண்டனில் பல அரசியல் பேரணிகளில் பங்கேற்க உள்ளார். அந்த பேரணிகளில் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வினவிய போது, ​​இது தொடர்பில் தமக்கு தெரியாது என தெரிவித்தார். கட்சி உறுப்பினர்களிடம் உறுப்பினர் கட்டணம் வசூலித்து அரசியல் பணி செய்யும் நோக்கில் இந்த நிறுவனம் நிறுவப்பட்டிருக்கலாம் என்றார். மற்ற நாடுகளில் கட்சியின் கிளைகளை பதிவு செய்வது குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.