கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பாரிய பிரச்சனைகளை ரணில் தீர்த்து வைத்தார், அதில் எந்த சந்தேகமும் இல்லை – சன்ன ஜயசுமண.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சன்ன ஜயசுமண ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி ஜனாதிபதி தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறு அரசியலமைப்பிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். .

அதற்கிணங்க முதிர்ந்த அரசியல் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க முடியும் எனவும், அதற்கான தீவிர புத்திசாலித்தனமும் அவருக்கு இருப்பதாகவும், அரசியலமைப்பு தொடர்பில் அவருக்கு நல்லறிவு இருப்பதாகவும், ஜனாதிபதி அதற்கமைவாக செயற்படுவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளையும், நாட்டு மக்கள் கடும் சிரமங்களையும் எதிர்கொண்டதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை இதுவரை பொருளாதார ரீதியில் குறிப்பாக எரிபொருள் பிரச்சனையை தீர்த்ததன் மூலம் நாட்டை இந்த நிலைக்கு கட்டியெழுப்பியுள்ளார் என்பதை சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜயசுமண தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு ரணில் விக்ரமசிங்கவால் நீடிக்க முடிந்தால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எதிர்காலத்தில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் அரசியல் சூழலின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதாகவும், சில கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானங்கள் தற்போது மோசமான தீர்மானங்களாகவும், தவறான தீர்மானங்களாகவும் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரைச் சுற்றி இருந்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளும் இதற்குக் காரணம்.
அநுராதபுரம் மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான குழுவொன்று கணக்கெடுப்பு நடத்தியதாகவும், அந்த கணக்கெடுப்பின் முடிவுகள் எதிர்காலத்தில் நாட்டிற்கு வெளிப்படுத்த தயாராக உள்ளதாகவும் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்தார்.

நாற்பது வீதமான மக்கள் எந்தவொரு அரசியல் தீர்மானத்தையும் எடுக்க முடியாமல் நடுநிலையுடன் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண கூறுகின்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் லால்காந்த அவர்கள் மேடைகளில் கூறும் கருத்துக்கள் அனுரகுமார திஸாநாயக்க மீதான மக்களின் விருப்பத்தை குறைக்கும் வகையில் அநுரகுமார திசாநாயக்க மீது ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

SJB மற்றும் JVP ஆகிய கட்சிகளுக்கிடையிலான விவாதம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இரண்டு பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதம் இந்த நாட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கும் விவாதமாகும்.

தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும், இறுதியாக தேர்தலில் வெற்றிபெறுவது தேர்தல் ஆணைக்குழுவா அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவா என்பதை எதிர்காலத்தில் பார்க்கலாம் எனவும் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.