நாங்கள் வந்தவுடன் திருடிய செல்வங்களை கையகப்படுத்துவோம் – சுனில் ஹந்துன்நெத்தி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தனது அரசின் முதல் படியாக, விரயம், ஊழலை தடுக்க முன்னுதாரணமாக செயல்படுவோம் என்றார். கொள்ளையடித்த மக்களின் பணத்தை , தற்போது உள்ள சட்டத்தை வைத்து , அல்லது புதிய சட்டத்தை உருவாக்கி மீட்போம்.

இந்நாட்டில் செலுத்தப்படாத வரிகளின் தொகை ஒரு டிரிலியனை தாண்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த வரிகளை மீளப் பெற முடிந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தம்புத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.