ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜூலை 21 ஆம் திகதி நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பாராம் ரணில்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான பகிரங்க அறிவிப்பை எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 2 வருடங்கள் நிறைவு பெறும் நாளில் (ஜூலை 21) தேர்தலில் போட்டியிடும் பகிரங்க அறிவிப்பை அவர் வெளியிடுவார். இது தொடர்பில் கட்சிக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கட்சி கூடி உரிய வகையில் – உரிய முடிவை எடுக்கும்.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.