கெஹலியவுக்கு விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (14) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கெஹலிய உள்ளிட்ட 8 பேரும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.