அடுத்த 15 நாட்களில் இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்புக்கு வருகிறார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இம்மாதம் கொழும்புக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் மத்திய வங்கிகள் மற்றும் நிதியமைச்சகங்களுக்கு இடையிலான நிதி ஒத்துழைப்பு ஆகியவற்றில் தற்போதுள்ள கூட்டாண்மைகளை மதிப்பாய்வு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் எதிர்வரும் காலங்களில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தை எதிர்பார்க்கும் களமாக அமையும் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.