பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல் கைது.

ஹன்வெல்ல – அம்புல்க பிரதேசத்தில் , பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ஒருவர் சட்டத்தரணி ஊடாக ஹங்வெல்ல பொலிஸில் இன்று (22) சரணடைந்துள்ளதாக நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

21 மற்றும் 24 வயதுடைய ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடுவெல – நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள்.

கூட்டு வன்புணர்வுக்கு உள்ளான 17 வயது பாடசாலை மாணவி நேற்று (21) தனது காதலனை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.

அதன்பின், வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, ​​இந்த குற்றத்தை எதிர்கொண்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.

ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுடுகாட்டிற்குள் மாணவி அழைத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் நாளை (23) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.