சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புக்கு ஜனாதிபதி செயலகத்தில் நிதி … இராணுவத்தைக் கொண்டு தேவாலயத்தை கட்டமைக்க ஜனாதிபதி உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு அன்று குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) காலை இணைந்துகொண்டார்.

தேவாலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான குரு வணக்கத்திற்குரிய ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார்.

தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது தொடர்பான உடனடி அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை ஜனாதிபதி அலுவலகத்தின் ஏற்பாட்டின் அடிப்படையில் துரிதமாக பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க அவர்களுக்கும் பணிப்புரை விடுத்தார்.

அந்த நடவடிக்கைகளுக்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவை வழங்குமாறும் ஜனாதிபதி இராணுவத் தளபதிக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.