ராஜபக்க்ஷக்களின் மொட்டுவை உடன் கைவிட வேண்டும் ரணில்! – லான்சா அணி வலியுறுத்து.

“ராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாகக் கைவிட வேண்டும்.”

இவ்வாறு நிமல் லான்சா தலைமையிலான ரணில் ஆதரவு அணி வலியுறுத்தியுள்ளது.

அந்த அணி இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளது என்று அறியமுடிகின்றது.

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நீங்கள், ராஜபக்ஷக்களின் மொட்டுக் கட்சியின் பின்னால் செல்வதையும், மொட்டுவின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷவை வாரம் தோறும் சந்திப்பு நடத்துவதையும் நாம் விரும்பவில்லை.

நாம் வேண்டுமா அல்லது மொட்டுக் கட்சி வேண்டுமா என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

மொட்டின் உறவை நீங்கள் துண்டிக்காவிட்டால் நாம் சுயாதீனமாகச் செயற்படுவோம்.” – என்று நிமல் லான்சா அணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் வெற்றிக்காகக் கட்சிகளை வளைத்துப் போட்டு கூட்டணி அமைக்கும் பணியை நிமல் லன்சா அணி மேற்கொண்டு வருகின்றது.

மொட்டுடன் ரணில் அதிகம் நெருங்கிச் செல்வதை நிமல் லன்சா அணி விரும்பாததால் இப்போது ரணில் – லன்சா கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.