ஜூலை முதல் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இரண்டு மாத கால விசேட நடவடிக்கையை ஆரம்பித்து பாதாள உலகக் கும்பல்களுக்கு சொந்தமான துப்பாக்கிகளை பறிமுதல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு அவர்களிடம் உள்ள துப்பாக்கிகள் பாரிய தடையாக இருப்பதால், முப்படைகளின் ஆதரவுடன் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட உள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் யுக்திய நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.