கொழும்பில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் மீது பொலிஸார் தாக்குதல்.

கொழும்பில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று முற்பகல் 11 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர்கள், ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.