ஆசிரியர்கள் பேரணியின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், உயர் அழுத்த தண்ணீர் வீசியும் தாக்குதல்….

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த போதே அது இடம்பெற்றுள்ளது.

லோட்டஸ் சந்திக்கு முன்பாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதிகளுக்குள் நுழையக்கூடாது என பல தொழிற்சங்க தலைவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.