தாக்குதலுக்கு எதிராக G.C.E. மதிப்பீடுகளை நிறுத்துவோம் : ஜோசப் ஸ்டாலின்.

நேற்று (ஜூன் 26) கொழும்பில் அதிபர் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூன் 27) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிடுகையில், இன்று (27) ஆரம்பமாகவிருந்த G.E.C. சாதாரணப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படாது.

நேற்றைய தினம் (26) லோட்டஸ் சந்திக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குழுவை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.