பொது சேவையில் பணியாற்றும் நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு சிறப்பு கொடுப்பனவு.

அரச சேவையின் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்கு பதிலாக , சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாது 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதே கொடுப்பனவு இலங்கை பொறியியல் சேவை, இலங்கை கட்டிடக்கலை சேவை மற்றும் இலங்கை நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் கிடைக்கும்.

இது தொடர்பான சுற்றறிக்கை விதிகள் 01.07.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.