சுன்னாகத்தில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் சிலர் மோட்டார் சைக்கிளை முற்றாக எரித்து அழித்த நிலையில் அதனை கண்டெடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காலையில் காணியின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை கண்டவுடன் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்ட போதும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரையோ அல்லது தீ வைத்தவர்களையோ அடையாளம் காண முடியவில்லை எனவும் நம்பர் பிளேட் மூலம் உரிமையாளரை அடையாளம் காண நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலரிடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த மோட்டார் சைக்கிள் எரித்துவிட்டு , சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.