‘ரணில் நல்லவர்’ என தவளைகள் கத்தும் காலம் இது – கம்மன்பில.

நாட்டுக்கு நற்செய்தி என ஜனாதிபதி அறிவித்தது இரண்டு வருடங்கள் பழமையான செய்தி என பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மக்களின் பணத்திற்கான வட்டியைக் குறைப்பதும், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிப்போடுவதும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுடன் இலகுவாக இருந்தாலும், தனிநபர் கடனைக் கொடுத்தவர்களால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் ஜூலை ஓகஸ்ட் மாதம் பணப் பைகளுக்காக குதிக்கும் தவளைகளின் மாதம் என்றும், தவளைகள் பக்க பக்க என்பதற்குப் பதிலாக ரணில் ஹொன்தாய், ரணில் நல்லவர் என கத்தும் என்றும் உதய கம்மன்பில நையாண்டியாக பேசியுள்ளார்.

தாயக மக்கள் கட்சியின் காலி மாநாட்டில் நேற்று (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதய கம்மன்பில அவ்வாறு சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.